1 இராஜாக்கள் 20:12குடித்துக்கொண்டு போருக்கு
பெனாதாத்தும், மற்ற ராஜாக்களும் கூடாரங்களிலே குடித்துக்கொண்டிருக்கையில், இந்த வார்த்தையைக் கேட்டு, தன் ஊழியக்காரரை நோக்கி: ஆயத்தம் பண்ணுங்கள் என்றான்; அப்படியே நகரத்தின்மேல் சண்டைசெய்ய ஆயத்தம் பண்ணினார்கள்.
1 Kings 20:12
குடித்துக்கொண்டு போருக்கு
பெனாதாத்தும் மற்ற ராஜாக்களும் கூடாரங்களில் மது அருந்திக் கொண்டிருந்த நேரத்தில் இந்த மறுமொழி வந்தது. உடனே யுத்தத்திற்கு ஆயத்தம் செய்யச் சொன்னான். மது போதையிலும் அவர்கள் தங்கள் அதிக பலத்தில் நம்பிக்கை வைத்திருந்தார்கள் என்று தெரிகிறது. இந்த அலட்சியம்தான் அவர்களின் வீழ்ச்சிக்கு காரணமாக இருக்கப்போகிறது.
