1 இராஜாக்கள் 21:25விற்றுப் போன ராஜா
தன் மனைவியாகிய யேசபேல் தூண்டிவிட்டபடியே, கர்த்தரின் பார்வைக்குப் பொல்லாப்பானதைச் செய்ய, தன்னை விற்றுப்போட்ட ஆகாபைப்போல ஒருவனுமில்லை.
1 Kings 21:25
விற்றுப் போன ராஜா
ஆகாபைப்போல் தேவனுடைய பார்வையில் பொல்லாப்பானதை செய்ய தன்னை விற்றுப்போட்டவன் யாருமில்லை என்று சொல்லப்படுகிறது. இது மிகக் கடுமையான வாக்கியம், ஆனால் இந்த முழு அதிகாரமும் அதற்கு சாட்சி. தன் மனைவியின் தூண்டுதலுக்கு தன்னை முழுவதுமாக விட்டுக்கொடுத்த ஒரு ராஜாவின் கதை இது.
