1 இராஜாக்கள் 22:12ஏகவாக்கு பொய்
சகல தீர்க்கதரிசிகளும் அதற்கு இசைவாகத் தீர்க்கதரிசனம் சொல்லி, கீலேயாத்திலுள்ள ராமோத்துக்குப்போம், உமக்கு வாய்க்கும்; கர்த்தர் அதை ராஜாவின் கையில் ஒப்புக்கொடுப்பார் என்றார்கள்.
1 Kings 22:12
ஏகவாக்கு பொய்
நானூறு தீர்க்கதரிசிகளும் ஒரே சத்தமாக “வெற்றி உமக்கு” என்று கூச்சலிட்டார்கள். இந்த ஏகவாக்கே ஆபத்தானது, ஏனெனில் உண்மையை பரிசோதிக்கும் மனசு அங்கு இல்லை. அனேகர் ஒன்றாக சொன்னால் அது சரியானதாகிவிடாது என்பதை இந்த காட்சி மீண்டும் நமக்கு நினைவூட்டுகிறது. திரள் கூட்டத்தின் குரலைவிட, கர்த்தரின் ஒரு உண்மையான குரலே மேலானது.
