1 சாமுவேல் 17:4காத்தூரான் கோலியாத்
அப்பொழுது காத் ஊரானாகிய கோலியாத் என்னும் பேருள்ள ஒரு வீரன் பெலிஸ்தரின் பாளயத்திலிருந்து புறப்பட்டுவந்து நடுவே நிற்பான்; அவன் உயரம் ஆறுமுழமும் ஒரு ஜாணுமாம்.
1 Samuel 17:4
காத்தூரான் கோலியாத்
பெலிஸ்தரின் பாளயத்திலிருந்து ஆறு முழமும் ஒரு ஜாணும் உயரமுள்ள ஒரு பயங்கர வீரன் முன்வந்தான். இவனுடைய உயரம் சாதாரண மனிதனுக்குக் கிட்டாத ஒன்று, பார்ப்பவர்களுக்கே நடுக்கம் தரும் தோற்றம். இந்த ஒரு மனுஷனின் நிழலில்தான் இஸ்ரவேல் முழுவதும் நாற்பது நாள் அஞ்சி நிற்கும். ஆனால் இந்தப் பயங்கர உருவத்தையே தேவன் ஒரு சிறு கல்லால் வீழ்த்தும்படி ஏற்பாடு செய்திருந்தார்.
