1 சாமுவேல் 23:3பயந்த மனுஷர்
ஆனாலும் தாவீதின் மனுஷர் அவனை நோக்கி: இதோ, நாங்கள் இங்கே யூதாவிலே இருக்கும்போதே பயப்படுகிறோம்; நாங்கள் பெலிஸ்தருடைய சேனைகளை எதிர்க்கிறதற்கு கேகிலாவுக்குப் போனால், எவ்வளவு அதிகம் என்றார்கள்.
1 Samuel 23:3
பயந்த மனுஷர்
தாவீதின் ஆறுநூறு மனுஷரும் தாமே சவுலுக்குப் பயந்து ஓடி ஒளிந்திருப்பவர்கள். இப்போது இன்னொரு படைக்கு எதிராக போருக்குச் செல்லச் சொன்னால் அவர்களுக்கு பயம் வருவது இயல்பே. அவர்கள் தங்கள் மனதைத் திறந்து தாவீதிடம் சொல்கிறார்கள், மறைக்கவில்லை. நம் பயத்தையும் தயக்கத்தையும் மறைக்காமல் சொல்வதும் ஒரு நல்ல குணமே.
