1 சாமுவேல் 23:9ஏபோத்தை கொண்டுவா
தனக்குப் பொல்லாப்புச் செய்யச் சவுல் எத்தனம்பண்ணுகிறான் என்று தாவீது அறிந்துகொண்டபோது, ஆசாரியனாகிய அபியத்தாரை நோக்கி: ஏபோத்தை இங்கே கொண்டுவா என்றான்.
1 Samuel 23:9
ஏபோத்தை கொண்டுவா
தாவீது சவுலின் திட்டத்தை ஏதோ வழியில் அறிந்துகொள்கிறார். உடனே பயந்து ஓடவில்லை, முதலில் ஆசாரியன் அபியத்தாரிடம் ஏபோத்தைக் கொண்டுவரச் சொல்கிறார். ஆபத்து நெருங்கும் ஒவ்வொரு தருணத்திலும் தாவீது முதலில் தேவனிடம் திரும்புவதே இந்த அதிகாரத்தில் திரும்பத் திரும்ப நாம் காண்பது. நம் வாழ்விலும் அபாயம் வரும்போது முதல் அடி எங்கு எடுக்க வேண்டும் என்பதை இது காட்டுகிறது.
