1 சாமுவேல் 25:36வெறியில் இருந்த நாபால்
அபிகாயில் நாபாலிடத்தில் வந்தபோது, இதோ, ராஜவிருந்துக்கு ஒப்பான விருந்து அவன் வீட்டிலே நடந்தது; அவன் இருதயம் களித்திருந்தது; அவன் மிகவும் வெறித்துமிருந்தான்; ஆகையால் பொழுது விடியுமட்டும் சிறியகாரியமானாலும் பெரிய காரியமானாலும், ஒன்றையும் அவனுக்கு அறிவிக்கவில்லை.
1 Samuel 25:36
வெறியில் இருந்த நாபால்
அபிகாயில் வீட்டிற்குத் திரும்பியபோது, நாபால் அரசவிருந்துக்கு ஒப்பான விருந்தில் மகிழ்ந்திருந்தான், மிகவும் வெறித்திருந்தான். தன் வீட்டையும் தன் உயிரையும் அபிகாயில் காப்பாற்றிய பெருஞ்செய்தி அவனுக்குத் தெரியாது. எத்தனை பெரிய ஆபத்திலிருந்து அவன் காப்பாற்றப்பட்டான் என்பதே அவனுக்குத் தெரியாமல் அவன் வெறியில் இருந்தான். இதனால் அன்று அவளால் அவனுக்கு எதையும் அறிவிக்க முடியவில்லை.
