1 சாமுவேல் 25:4செய்தி கேட்ட தாவீது
நாபால் தன் ஆடுகளை மயிர்கத்தரிக்கிற செய்தியை வனாந்தரத்தில் இருக்கிற தாவீது கேட்டபோது,
1 Samuel 25:4
செய்தி கேட்ட தாவீது
வனாந்தரத்தில் ஓடி ஒளிந்திருந்த தாவீது, நாபால் ஆடுகளை மயிர் கத்தரிக்கிறான் என்ற செய்தியைக் கேட்டார். அது வருமான காலம், விருந்து காலம் என்று தாவீதுக்கு நன்கு தெரிந்திருந்தது. தன் மனுஷர் நாபாலின் ஆடுகளைப் பாதுகாத்திருந்ததால், அவற்றின் பலனை கேட்பது நியாயமே என்று அவர் நினைத்தார்.
