1 சாமுவேல் 3:1வசனம் அரிதான நாட்கள்
சாமுவேல் என்னும் பிள்ளையாண்டான் ஏலிக்கு முன்பாகக் கர்த்தருக்குப் பணிவிடை செய்துகொண்டிருந்தான்; அந்நாட்களிலே கர்த்தருடைய வசனம் அபூர்வமாயிருந்தது; பிரத்தியட்சமான தரிசனம் இருந்ததில்லை.
1 Samuel 3:1
வசனம் அரிதான நாட்கள்
அந்த நாட்களில் தேவனுடைய குரல் கேட்பது மிக அரிதாக இருந்தது. ஏலியின் குமாரர் அக்கிரமம் செய்தும், ஆசாரியத் தலமே சீர்கெட்டிருந்த காலம் அது. அப்படியொரு வறட்சியான நாளில் சிறு பையனாகிய சாமுவேல் ஆலயத்தில் ஏலிக்கு பணிவிடை செய்துகொண்டிருந்தார். தேவன் பேசாத நேரங்களில் நாமும் அவரைத் தேடத் தளராமல் இருந்தால், அவரே தம் நேரத்தில் பேசுவார்.
