1 சாமுவேல் 30:1எரிந்த ஊர்
தாவீதும் அவன் மனுஷரும் மூன்றாம் நாளிலே, சிக்லாகுக்கு வந்து சேருகிறதற்குள்ளே, அமலேக்கியர் தென்புறத்துச் சீமையின்மேலும் சிக்லாகின் மேலும் விழுந்து, சிக்லாகைக் கொள்ளையடித்து, அதை அக்கினியால் சுட்டெரித்து,
1 Samuel 30:1
எரிந்த ஊர்
தாவீதும் அவர் மனுஷரும் ஆகீஸ் அரசனுடன் யுத்தத்திற்குப் போயிருந்தபோது, அமலேக்கியர் அந்த சமயம் பார்த்து சிக்லாகின் மேல் விழுந்தார்கள். அவர்கள் திரும்பி வருகிறதற்குள்ளாகவே ஊரை கொள்ளையடித்து தீக்கொளுத்திவிட்டார்கள். எத்தனை நாள் கஷ்டப்பட்டு காத்திருந்த குடும்பங்கள், ஒரு நாளில் எல்லாம் இழந்தார்கள். இப்படித்தான் நம் வாழ்விலும், நாம் எதிர்பாராத நேரத்தில் இழப்புகள் வரும்.
