1 சாமுவேல் 9:21நான் சிறியவன் அல்லவா
அப்பொழுது சவுல் பிரதியுத்தரமாக: நான் இஸ்ரவேல் கோத்திரங்களிலே சிறிதான பென்யமீன் கோத்திரத்தான் அல்லவா? பென்யமீன் கோத்திரத்துக் குடும்பங்களிலெல்லாம் என் குடும்பம் அற்பமானது அல்லவா? நீர் இப்படிப்பட்ட வார்த்தையை என்னிடத்தில் சொல்வானேன் என்றான்.
1 Samuel 9:21
நான் சிறியவன் அல்லவா
இந்த வார்த்தைகளைக் கேட்ட சவுலுக்கு அதிசயமாகவே இருந்திருக்கும். தான் இஸ்ரவேலின் சிறிய கோத்திரத்தானாகிய பென்யமீனில், அற்பமான குடும்பத்தில் இருந்து வந்தவன் என்று தன்னைத் தாழ்மையாகச் சொல்கிறார். இந்த முதல் பதிலில் ஒரு தாழ்மையான மனது தெரிகிறது, பிற்காலத்தில் மாறிப்போவதற்கு முன்பான சவுலின் நல்ல தன்மை இது.
