2 நாளாகமம் 10:1சீகேமில் கூடிய கூட்டம்
ரெகொபெயாமை ராஜாவாக்கும்படி இஸ்ரவேலர் எல்லாரும் சீகேமுக்கு வந்திருந்தபடியால், அவனும் சீகேமுக்குப்போனான்.
2 Chronicles 10:1
சீகேமில் கூடிய கூட்டம்
சாலொமோன் இளவரசு ரெகொபெயாம் ராஜாவாக முடிசூட்டப்படும் நாள் இது. ஆனால் விநோதமாய் அவர் எருசலேமில் அல்ல, சீகேமிலே முடிசூட்டப்பட வேண்டியிருந்தது. ஏனெனில் இஸ்ரவேலர் எல்லாரும் அங்கே கூடி, தங்கள் கேள்விகளுக்குப் பதில் கேட்க விரும்பினார்கள். ஒரு புதிய ராஜா ஆட்சிக்கு வரும்போது, ஜனங்களும் தங்கள் மனதிலுள்ளதைச் சொல்ல ஆவலாய் காத்திருந்தார்கள்.
