2 நாளாகமம் 11:4திரும்பிப் போங்கள்
நீங்கள் போகாமலும், உங்கள் சகோதரரோடு யுத்தம்பண்ணாமலும் அவரவர் தம்தம் வீட்டுக்குத் திரும்புங்கள்; என்னாலே இந்தக் காரியம் நடந்தது என்று கர்த்தர் உரைக்கிறார் என்று சொல் என்றார்; அப்பொழுது அவர்கள் கர்த்தருடைய வார்த்தைகளுக்குக் கீழ்ப்படிந்து, யெரொபெயாமுக்கு விரோதமாய் யுத்தம்பண்ணுவதை விட்டுத் திரும்பிப் போய்விட்டார்கள்.
2 Chronicles 11:4
திரும்பிப் போங்கள்
'என்னாலே இந்தக் காரியம் நடந்தது' என்று கர்த்தர் சொன்ன வார்த்தை எத்தனை ஆழமானது. ராஜ்யம் பிளவுபட்டது தேவனுடைய அனுமதியில் நடந்ததே, மனுஷ தவறால் மட்டுமல்ல. அதனால் சகோதரரோடு போர் செய்யாமல் அவரவர் வீட்டுக்குத் திரும்பச் சொல்கிறார். அந்த மக்கள் உடனே கீழ்ப்படிந்து போய்விட்டார்கள் என்பது எவ்வளவு பெரிய கீழ்ப்படிதல்!
