2 நாளாகமம் 14:9பத்துலட்சம் எதிரி
அவர்களுக்கு விரோதமாக எத்தியோப்பியனாகிய சேரா பத்துலட்சம்பேர்கள் சேர்ந்த சேனையோடும் முந்நூறு இரதங்களோடும் புறப்பட்டு மரேசாமட்டும் வந்தான்.
2 Chronicles 14:9
பத்துலட்சம் எதிரி
திடீரென அந்த அமைதி முடிந்தது. எத்தியோப்பியனாகிய சேரா பத்துலட்சம் பேர்கள் சேர்ந்த மகா பெரும் சேனையோடும் முந்நூறு இரதங்களோடும் யூதாவின் மேல் படையெடுத்து வந்தான். இது ஆசா அன்றுவரை கண்டிராத மிகப்பெரிய அச்சுறுத்தல். மனுஷ கண்ணோட்டத்தில் யூதாவின் சேனை எத்தனை பலமாக இருந்தாலும், இந்த எண்ணிக்கை முன் அது ஒன்றும் இல்லை என்றே தோன்றும்.
