2 நாளாகமம் 18:29வேஷமிட்ட அரசன்
இஸ்ரவேலின் ராஜா யோசபாத்தைப் பார்த்து நான் வேஷமாறி யுத்தத்தில் பிரவேசிப்பேன்; நீரோ ராஜவஸ்திரம் தரித்திரும் என்று சொல்லி, இஸ்ரவேலின் ராஜா வேஷமாறி யுத்தத்தில் பிரவேசித்தான்.
2 Chronicles 18:29
வேஷமிட்ட அரசன்
ஆகாப் தன்னை மறைக்க வேஷமிட்டு போருக்குச் செல்கிறான், யோசபாத்தோ ராஜவஸ்திரம் தரித்தே செல்கிறார். ஆகாப் தேவனுடைய தீர்மானத்தில் இருந்து தன்னை மறைக்க நினைத்தான், ஆனால் மனிதனுடைய தந்திரம் தேவனுடைய வார்த்தையை மாற்ற முடியாது. நாம் எவ்வளவு நமது சொந்த திட்டங்களால் தேவனுடைய வார்த்தையிலிருந்து தப்பிக்க முயற்சித்தாலும், அது நிச்சயம் நிறைவேறும்.
