2 நாளாகமம் 34:30அனைவரும் கேட்டார்கள்
ராஜாவும், சகல யூதா மனுஷரும், எருசலேமின் குடிகளும், ஆசாரியரும், லேவியரும், பெரியோர்முதல் சிறியோர்மட்டுமுள்ள சகலருமாய்க் கர்த்தருடைய ஆலயத்துக்குப் போனார்கள்; கர்த்தருடைய ஆலயத்திலே கண்டெடுக்கப்பட்ட உடன்படிக்கைப் புத்தகத்தின் வார்த்தைகளையெல்லாம் அவர்கள் காதுகள் கேட்க வாசித்தான்.
2 Chronicles 34:30
அனைவரும் கேட்டார்கள்
ராஜா, மனுஷர், குடிகள், ஆசாரியர், லேவியர், பெரியோர் சிறியோர் என்று அனைவரும் ஆலயத்திற்குச் சென்று, கண்டெடுக்கப்பட்ட உடன்படிக்கை புத்தகத்தின் வார்த்தைகளை தங்கள் காதுகள் கேட்க வாசிக்கப் பட்டதை கேட்டார்கள். இது ஒரு அபூர்வ காட்சி - ஒரு தேசம் முழுவதும் ஒன்றுகூடி தேவனுடைய வார்த்தையைக் கேட்கிறது. பெரியோர் மட்டும் அல்ல, சிறியோர்கூட விலக்கப்படவில்லை. தேவனுடைய வார்த்தை அனைவருக்கும் சொந்தம், அது ஒரு சிலரின் சொத்தல்ல என்பதை இந்தக் காட்சி நமக்குக் காட்டுகிறது.
