2 நாளாகமம் 4:1வெண்கலப் பலிபீடம்
அன்றியும் இருபதுமுழநீளமும் இருபதுமுழ அகலமும் பத்துமுழ உயரமுமான வெண்கலப் பலிபீடத்தையும் பண்ணினான்.
2 Chronicles 4:1
வெண்கலப் பலிபீடம்
இருபது முழம் நீளமும் அகலமும், பத்து முழம் உயரமுமான இந்தப் பலிபீடம் மோசேயின் காலத்திலிருந்த சிறு பலிபீடத்தைவிட மிகப் பெரியது. ஆலயம் பெரியதாக இருந்ததால், அதற்குரிய பலிபீடமும் அந்த அளவில் அமைந்தது. இந்தப் பலிபீடத்தின்மேல்தான் ஜனங்களின் பாவங்களுக்காக அன்றாடம் பலிகள் எரிக்கப்பட்டன. கர்த்தரை நெருங்குவது எளிதான காரியமல்ல, அதற்கு விலை கொடுக்கப்பட வேண்டும் என்பதை இந்தப் பலிபீடம் நினைவூட்டுகிறது.
