2 இராஜாக்கள் 11:18பாகாலின் கோவில் இடிப்பு
பின்பு தேசத்தின் ஜனங்கள் எல்லாரும் பாகாலின் கோவிலில் போய், அதை இடித்து, அதின் பலிபீடங்களையும் அதின் விக்கிரகங்களையும் முற்றிலும் உடைத்து, பாகாலின் பூஜாசாரியாகிய மாத்தானைப் பலிபீடங்களுக்கு முன்பாகக் கொன்று போட்டார்கள். ஆசாரியன் கர்த்தருடைய ஆலயத்தை விசாரிக்கும் உத்தியோகஸ்தரை ஏற்படுத்தினான்.
2 Kings 11:18
பாகாலின் கோவில் இடிப்பு
மக்கள் எல்லாரும் ஒன்றுசேர்ந்து பாகாலின் கோவிலுக்கே போய், அதை இடித்து, பலிபீடங்களையும் விக்கிரகங்களையும் உடைத்தார்கள், அதன் பூஜாசாரியனையும் கொன்றுபோட்டார்கள். அத்தாலியாளின் ஆட்சியில் வேரூன்றியிருந்த இந்த விக்கிரக ஆராதனையை, மக்கள் மனசார அகற்றிவிட்டார்கள். புது ராஜாவின் கீழ் புதிய ஆரம்பம் என்பது, முதலில் தேவனை நோக்கிய திரும்புதலிலேயே ஆரம்பித்தது.
