2 சாமுவேல் 11:2உப்பரிகையின் பார்வை
ஒருநாள் சாயங்காலத்தில் தாவீது தன் படுக்கையிலிருந்து எழுந்து, அரமனை உப்பரிகையின்மேல் உலாத்திக்கொண்டிருக்கும்போது, ஸ்நானம்பண்ணுகிற ஒரு ஸ்திரீயை உப்பரிகையின்மேலிருந்து கண்டான்; அந்த ஸ்திரீ வெகு செளந்தரவதியாயிருந்தாள்.
2 Samuel 11:2
உப்பரிகையின் பார்வை
மாலை நேரம், தாவீது தன் அரமனை உப்பரிகையில் உலாவிக்கொண்டிருந்தார். அந்நேரம் தான் அழகான ஒரு பெண் குளிப்பதைக் கண்டார். ஒரு பார்வை தவறல்ல, ஆனால் அந்தப் பார்வையை நீட்டித்து, மனதில் வைத்துக்கொண்டதே பாதகமான ஆரம்பமாயிற்று. கண் பார்த்ததை மனது விட்டுத் தள்ளாவிட்டால், அது இதயத்தில் வேர்விட்டுவிடும்.
