2 சாமுவேல் 16:9அபிசாயின் கோபம்
அப்பொழுது செருயாவின் குமாரன் அபிசாய் ராஜாவை நோக்கி: அந்தச் செத்தநாய் ராஜாவாகிய என் ஆண்டவனை தூஷிப்பானேன்? நான் போய் அவன் தலையை வாங்கிப்போடட்டுமே என்றான்.
2 Samuel 16:9
அபிசாயின் கோபம்
தன் ராஜாவை இப்படி தூஷிக்க யார் இந்த மனுஷன் என்று அபிசாய் கோபங்கொண்டு, சீமேயியின் தலையை வாங்கிவிடலாம் என்று தாவீதிடம் அனுமதி கேட்டான். இது ராஜாவின் மேலுள்ள உண்மையான அன்பினாலும், அவமானத்தைப் பொறுக்கமுடியாத வீரத்தினாலும் வந்த வார்த்தை. நம் அன்பானவர்கள் அவமானப்படும்போது நமக்கும் இப்படி கோபம் வருவது இயற்கையானதே.
