2 சாமுவேல் 18:4வாசலில் நின்ற ராஜா
அப்பொழுது ராஜா அவர்களைப்பார்த்து: உங்களுக்கு நலமாய்த் தோன்றுகிறதைச் செய்வேன் என்று சொல்லி, ராஜா ஒலிமுகவாசல் ஓரத்திலே நின்றான்; ஜனங்கள் எல்லாரும் நூறுநூறாகவும், ஆயிரம் ஆயிரமாகவும் புறப்பட்டார்கள்.
2 Samuel 18:4
வாசலில் நின்ற ராஜா
ஜனங்களின் வேண்டுகோளுக்கு தாவீது இணங்கி, தானே போருக்குச் செல்லாமல் நகர வாசலில் நின்று படை புறப்படுவதைக் கண்டார். நூறுநூறாகவும் ஆயிரமாகவும் அணிவகுத்துச் செல்லும் ஜனங்களைப் பார்க்கும் அந்த தந்தையின் மனது எப்படியிருந்திருக்குமோ. படை புறப்படுகிறது, ஆனால் அவரது இதயம் அப்சலோமையே சுற்றி நின்றிருந்தது.
