அப்போஸ்தலர் 14:2பகைவரின் தூண்டுதல்
விசுவாசியாத யூதர்கள் சகோதரருக்கு விரோதமாகப் புறஜாதியாருடைய மனதை எழுப்பிவிட்டு, பகையுண்டாக்கினார்க்ள்.
Acts 14:2
பகைவரின் தூண்டுதல்
நம்பாத யூதர்கள் அமைதியாக இருக்கவில்லை; புறஜாதி மக்களின் மனதை பவுலுக்கும் பர்னபாவுக்கும் விரோதமாக எழுப்பிவிட்டார்கள். நற்செய்தி எங்கு வளர்ந்ததோ, அங்கு எதிர்ப்பும் உடனே தலைதூக்கியது. இது ஒரு வழக்கமான போரட்டம் — வெளிச்சம் வரும்போது இருள் அதை எதிர்க்கும். இதை நினைத்து நாம் மனது தளராமல் இருக்கலாம்.
