தானியேல் 10:19திடங்கொள், திடங்கொள்
பிரியமான புருஷனே, பயப்படாதே, உனக்குச் சமாதானமுண்டாவதாக, திடங்கொள், திடங்கொள் என்றான்; இப்படி அவன் என்னோடே பேசுகையில் நான் திடங்கொண்டு அவனை நோக்கி: என் ஆண்டவன் பேசுவாராக; என்னைத் திடப்படுத்தினீரே என்றேன்.
Daniel 10:19
திடங்கொள், திடங்கொள்
'பயப்படாதே, உனக்குச் சமாதானமுண்டாவதாக, திடங்கொள், திடங்கொள்' - இந்த வார்த்தைகளை இரண்டு முறை சொல்லி தூதன் தானியேலை தேற்றுகிறார். இந்த அன்பான வார்த்தைகளால் தானியேல் மறுபடியும் திடம் பெற்று பேச முடிந்தது. தேவனுடைய அன்பான வார்த்தைகள் நம் பலவீனத்தை நீக்கி நம்மை மேலெழச் செய்யும் வல்லமை உடையவை என்பதை இது காட்டுகிறது.
