TamilBible.ai App

For offline reading and AI chat

Get the app
TamilBible.ai

தானியேல் 6:12மாறாத பிரமாணமே

பின்பு அவர்கள் ராஜாவுக்கு முன்பாக வந்து, ராஜாவின் தாக்கீதைக்குறித்து: எந்த மனுஷனாகிலும் முப்பது நாள்வரையில் ராஜாவாகிய உம்மைத்தவிர எந்த தேவனையானாலும் மனுஷனையானாலும் நோக்கி யாதொரு காரியத்தைக்குறித்து விண்ணப்பம் பண்ணினால். அவன் சிங்கங்களின் கெபியிலே போடப்படவேண்டும் என்று நீர் கட்டளைப்பத்திரத்தில் கையெழுத்து வைத்தீர் அல்லவா என்றார்கள்; அதற்கு ராஜா: அந்தக் காரியம் மேதியருக்கும் பெர்சியருக்கும் இருக்கிற மாறாத பிரமாணத்தின்படி உறுதியாக்கப்பட்டதே என்றான்.

Daniel 6:12

மாறாத பிரமாணமே

அவர்கள் ராஜாவிடம் போய், கட்டளை கையெழுத்திடப்பட்டதை உறுதிப்படுத்தினார்கள். ராஜாவும் அது மேதியருக்கும் பெர்சியருக்கும் இருக்கிற மாறாத பிரமாணம் என்று உறுதி செய்தான். அப்போதுதான் தான் அறியாமலேயே கையெழுத்திட்டதன் விளைவு அவனுக்குப் புரியத் தொடங்கியிருக்கலாம். மனுஷ சட்டங்கள் எவ்வளவு உறுதியானதாக இருந்தாலும், தேவனுடைய திட்டத்தை நிறுத்த முடியாது என்பது கதையின் மேல் தெரியவரும்.