உபாகமம் 10:2அதே வார்த்தைகள்
நீ உடைத்துப்போட்ட முந்தின பலகைகளில் இருந்த வார்த்தைகளை நான் அந்தப் பலகைகளில் எழுதுவேன்; நீ அவைகளைப் பெட்டியிலே வைப்பாயாக என்றார்.
Deuteronomy 10:2
அதே வார்த்தைகள்
கர்த்தர் ஒரு வார்த்தையும் மாற்றவில்லை. உடைந்துபோன பலகைகளில் இருந்த அதே பத்துக் கற்பனைகளையே புதிய பலகைகளிலும் எழுதுவேன் என்கிறார். மனுஷனுடைய தவறு தேவனுடைய வார்த்தையை மாற்றாது. அந்தப் பெட்டியிலே அவைகளை பத்திரப்படுத்த வேண்டும் என்பது எவ்வளவு பரிசுத்தமான பொருள் அது என்பதைக் காட்டுகிறது.
