பிரசங்கி 5:19தேவனுடைய அநுக்கிரகம்
தேவன் ஐசுவரியத்தையும் சம்பத்தையும் எவனுக்குக் கொடுத்திருக்கிறாரோ, அவன் அதிலே புசிக்கவும், தன்பங்கைப் பெறவும், தன் பிரயாசத்திலே மகிழ்ச்சியாயிருக்கவும் அவனுக்கு அதிகாரம் அளிப்பது தேவனுடைய அநுக்கிரகம்.
Ecclesiastes 5:19
தேவனுடைய அநுக்கிரகம்
செல்வத்தை மட்டும் தந்துவிடுவது போதாது, அதில் மகிழ்ச்சியாக இருக்கும் இருதயத்தையும் தேவன் கொடுக்கவேண்டும் என்று சாலொமோன் அறிகிறார். எத்தனையோ பேர் செல்வம் இருந்தும் மகிழ்ச்சியாய் இருக்க முடியாமல் இருக்கிறார்கள். தன் பங்கை பெற்று, தன் பிரயாசத்தில் மகிழ்ச்சியாய் இருக்க முடிவது ஒரு பெரிய அநுக்கிரகம். செல்வம் மட்டும் போதாது, அதை அனுபவிக்கும் மனசும் தேவனிடமிருந்தே வருகிறது.
