பிரசங்கி 9:4உயிருள்ள நாய் வாசி
இதற்கு நீங்கலாயிருக்கிறவன் யார்? உயிரோடிருக்கிற அனைவரிடத்திலும் நம்பிக்கையுண்டு; செத்த சிங்கத்தைப்பார்க்கிலும் உயிருள்ள நாய் வாசி.
Ecclesiastes 9:4
உயிருள்ள நாய் வாசி
பழங்காலத்தில் நாய் என்பது இழிவான மிருகமாகவும், சிங்கம் வலிமையின் அடையாளமாகவும் கருதப்பட்டது. அப்படியிருந்தும் சாலொமோன் சொல்கிறார், இழிவான நாயாயினும் உயிருடன் இருந்தால் அது இறந்த ராஜாவான சிங்கத்தைவிட மேலானது. உயிரோடிருக்கும்வரை நம்பிக்கை உண்டு, மாற்றம் உண்டு, மனந்திரும்புதல் உண்டு. இது சாதாரண வாழ்க்கையின் மதிப்பை உணர்த்தும் ஒரு அழகான உண்மை.
