எசேக்கியேல் 19:2பெண்சிங்கமான தாய்
சொல்லவேண்டியது என்னவென்றால்: உன் தாய் எப்படிப்பட்டவள்? அவள் ஒரு பெண்சிங்கம், அவள் சிங்கங்களுக்குள்ளே படுத்திருந்து, பாலசிங்கங்களின் நடுவிலே தன் குட்டிகளை வளர்த்தாள்.
Ezekiel 19:2
பெண்சிங்கமான தாய்
இஸ்ரவேல் தேசத்தை ஒரு பெண்சிங்கமாக சித்தரிக்கிறார் எசேக்கியேல். சிங்கங்களின் நடுவே தன் குட்டிகளை வளர்த்த அந்த தாய், யூதா தேசத்தையே குறிக்கிறாள். அவள் வளர்த்த குட்டிகள் தான் இஸ்ரவேலின் அரசர்கள். வலிமையாக, கம்பீரமாக பிறந்த அந்த குட்டிகள் என்ன ஆனார்கள் என்பதே இந்த புலம்பலின் கதை.
