எசேக்கியேல் 2:8கலகக்காரனாக இராமல்
மனுபுத்திரனே, நீ அந்தக் கலகவீட்டாரைப்போலக் கலகக்காரனாயிராமல், நான் உன்னோடே சொல்லுகிறதைக் கேள்; உன் வாயைத் திறந்து நான் உனக்குக் கொடுக்கிறதைப் புசி என்றார்.
Ezekiel 2:8
கலகக்காரனாக இராமல்
கர்த்தர் எசேக்கியேலிடம் ஒரு எச்சரிக்கையையும் சேர்த்துச் சொல்கிறார் - மக்களைப் போல அவரும் கலகக்காரனாக ஆகிவிடக் கூடாது என்று. முதலில் தேவனுடைய வார்த்தையைக் கேட்டு, பின் அதைப் புசிக்க வேண்டும் என்று சொல்கிறார், அதாவது தன் உள்ளத்தில் அந்த வார்த்தையை முழுமையாக ஏற்றுக்கொள்ள வேண்டும். மற்றவரிடம் சொல்லும் வார்த்தையை முதலில் தான் தன் இருதயத்தில் ஏற்றுக் கொள்ள வேண்டும் என்பது ஒவ்வொரு ஊழியருக்கும் அடிப்படை. வார்த்தையைப் பகிர்வதற்கு முன், அதை நம் உள்ளத்தில் முதலில் வாங்க வேண்டும்.
