எசேக்கியேல் 8:11எழுபது மூப்பர் தூபம் காட்டல்
இஸ்ரவேல் வம்சத்தாரின் மூப்பரில் எழுபதுபேரும், அவர்களின் நடுவிலே சாப்பானுடைய குமாரனாகிய யசனியாவும், அவனவன் தன்தன் கையிலே தன்தன் தூபகலசத்தைப் பிடித்துக்கொண்டு, அவைகளுக்கு முன்பாக நின்றார்கள், தூபவர்க்கத்தினால் மிகுந்த புகை எழும்பிற்று.
Ezekiel 8:11
எழுபது மூப்பர் தூபம் காட்டல்
இஸ்ரவேலின் எழுபது மூப்பரும், யசனியா என்பவரும் நடுவில் நின்று, அவரவர் கையிலே தூபகலசம் பிடித்துக்கொண்டு அந்த விக்கிரகங்களுக்கு முன்பாக தூபம் காட்டினார்கள். தலைவர்களே இந்த பாபத்தில் முதலிடம் வகித்தார்கள் என்பது எவ்வளவு துக்கமான செய்தி. ஜனத்தை நேர்வழி காட்ட வேண்டியவர்களே அவர்களை தவறான வழியில் இழுத்துச் சென்றனர். தலைமையில் இருப்பவர் தன் நடத்தையால் எத்தனை ஆத்துமாக்களை பாதிக்கிறார் என்பதை இது நமக்குப் படிப்பினையாக்குகிறது.
