ஆதியாகமம் 18:30முப்பது பேருக்கு
அப்பொழுது அவன்: நான் இன்னும் பேசுகிறேன், ஆண்டவருக்குக் கோபம் வராமலிருப்பதாக; முப்பது நீதிமான்கள் அங்கே காணப்பட்டாலோ என்றான். அதற்கு அவர்: நான் முப்பது நீதிமான்களை அங்கே கண்டால், அதை அழிப்பதில்லை என்றார்.
Genesis 18:30
முப்பது பேருக்கு
ஆண்டவருக்கு கோபம் வராமலிருக்க வேண்டும் என்ற பயத்தோடு, முப்பது நீதிமான்கள் இருந்தாலோ என்று ஆபிரகாம் கேட்கிறார். கர்த்தர் அதற்கும் அழிக்கமாட்டேன் என்று சொல்கிறார். தன் கேள்வி கர்த்தரின் கோபத்தை தூண்டிவிடுமோ என்ற ஆபிரகாமின் அச்சத்திலேயே அவருடைய பணிவு தெரிகிறது.
