ஆதியாகமம் 24:1முதிர்ந்த வயதின் ஆசீர்வாதம்
ஆபிரகாம் வயது சென்று முதிர்ந்தவனானான். கர்த்தர் ஆபிரகாமைச் சகல காரியங்களிலும் ஆசீர்வதித்து வந்தார்.
Genesis 24:1
முதிர்ந்த வயதின் ஆசீர்வாதம்
ஆபிரகாம் வயதுசென்று முதிர்ந்திருந்தார். ஆனாலும் அவருடைய வாழ்க்கை நோக்கிப் பார்த்தால், கர்த்தர் ஒவ்வொரு நாளும் அவரை ஆசீர்வதித்திருப்பதைக் காணலாம். மனைவி, பிள்ளை, செல்வம், நிலம் எல்லாமே கர்த்தருடைய கையின் வேலை. இப்போது ஒரே ஒரு காரியம் மட்டும் மீதம் இருந்தது - தன் மகனுக்கு ஏற்ற மனைவியைக் கண்டுபிடிப்பது. வயதான காலத்திலும் தன் பிள்ளையின் எதிர்காலத்தைப் பற்றிய கரிசனை அவருக்கு இருந்தது.
