ஆதியாகமம் 26:12நூறுமடங்கு பலன்
ஈசாக்கு அந்தத் தேசத்தில் விதை விதைத்தான்; கர்த்தர் அவனை ஆசீர்வதித்ததினால் அந்த வருஷத்தில் நூறுமடங்கு பலன் அடைந்தான்;
Genesis 26:12
நூறுமடங்கு பலன்
பஞ்சம் நிலவிய தேசத்திலேயே ஈசாக்கு விதை விதைத்தார், அதிலும் தேவனுடைய ஆசீர்வாதத்தால் நூறுமடங்கு பலன் அடைந்தார். இது இயற்கையான காரணத்தால் நடந்தது என்று சொல்ல முடியாது, தேவனுடைய கையின் நேரடி செயலாகவே இருந்தது. கஷ்ட காலத்திலும் தேவன் தமது பிள்ளைகளுக்கு நன்மை செய்ய வழி பார்ப்பார் என்பதற்கு இது ஒரு அற்புத அடையாளம்.
