ஆதியாகமம் 31:2முகத்தில் தெரிந்த மாற்றம்
லாபானின் முகத்தை யாக்கோபு பார்த்தபோது, அது நேற்று முந்தைநாள் இருந்ததுபோல் இராமல் வேறுபட்டிருக்கக் கண்டான்.
Genesis 31:2
முகத்தில் தெரிந்த மாற்றம்
லாபானின் முகத்தைப் பார்த்ததும் யாக்கோபுக்கு ஒரு விஷயம் புரிந்தது. நேற்று இருந்த அன்பு இன்று இல்லை, மனசு மாறிப்போய் இருந்தது. மனிதனுடைய முகமே பல சமயங்களில் அவனுடைய இருதயத்தின் நிலைமையைச் சொல்லிவிடும். யாக்கோபு இதை உணர்ந்தார், அதனால்தான் அடுத்த அடி எடுக்க தயாராகி விட்டார். மனுஷரின் அன்பு மாறலாம், ஆனால் தேவனுடைய அன்பு ஒருபோதும் மாறாது என்பது நமக்கு ஆறுதல்.
