ஆபகூக் 3:10மலைகள் நடுங்கின, ஆழி இரைந்தது
பர்வதங்கள் உம்மைக் கண்டு நடுங்கின; ஜலம் பிரவாகித்துக் கடந்துபோயிற்று, ஆழி இரைந்தது, அதின் கைகளை உயர எடுத்தது.
Habakkuk 3:10
மலைகள் நடுங்கின, ஆழி இரைந்தது
தேவனைக் கண்ட பர்வதங்கள் நடுங்கின, ஜலப்பிரவாகம் கடந்தோடியது, ஆழிக்கடல் தன் அலைகளை உயர எழுத்திக் கொண்டு இரைந்தது. இது இயற்கை முழுவதும் தன் சிருஷ்டிகர்த்தாவை அறிந்து பயந்து நடுங்குகிறது என்று காட்டும் அற்புதமான கவிதை உருவகம். மனுஷனை விட மலைகளும் கடலும் தேவனை நன்றாக அறிந்திருக்கின்றன போலும். இந்த பிரபஞ்சம் முழுவதும் அவர் முன் பணிந்து நடுங்குகிறது என்பதை நினைத்துப் பாருங்கள்.
