எபிரெயர் 10:1நிழல் மாத்திரம்
இப்படியிருக்க, நியாயப்பிரமாணமானது வரப்போகிற நன்மைகளின் பொருளாயிராமல், அவைகளின் நிழலாய்மாத்திரம் இருக்கிறபடியால், வருஷந்தோறும் இடைவிடாமல் செலுத்தப்பட்டுவருகிற ஒரேவிதமான பலிகளினாலே அவைகளைச் செலுத்த வருகிறவர்களை ஒருக்காலும் பூரணப்படுத்தமாட்டாது.
Hebrews 10:1
நிழல் மாத்திரம்
நியாயப்பிரமாணம் ஒரு நிழல் போன்றது என்று ஆசிரியர் சொல்கிறார். வெயிலில் நடக்கும்போது நமக்கு முன்னால் நம் நிழல் தெரியும், ஆனால் அந்த நிழலைப் பிடித்துக்கொள்ள முடியாதே. அது நிஜமான உடலைக் காட்டும் அடையாளம் மட்டுமே. அப்படியே வருஷந்தோறும் செலுத்திய பலிகள் வரவிருக்கும் கிறிஸ்துவின் நிஜமான பலியை முன்னறிவிக்கும் நிழல்களாக இருந்தன, அவைகளால் ஒருவரும் முழுமையாக சுத்தமாக்கப்படவில்லை. நம் விசுவாசம் நிழலில் அல்ல, நிஜத்தில் நிற்கட்டும்.
