எபிரெயர் 12:3சோர்ந்துபோகாதிருங்கள்
ஆகையால் நீங்கள் இளைப்புள்ளவர்களாய் உங்கள் ஆத்துமாக்களில் சோர்ந்துபோகாதபடிக்கு, தமக்கு விரோதமாய்ப் பாவிகளால் செய்யப்பட்ட இவ்விதமான விபரீதங்களைச் சகித்த அவரையே நினைத்துக்கொள்ளுங்கள்
Hebrews 12:3
சோர்ந்துபோகாதிருங்கள்
பாவிகளால் இயேசு அனுபவித்த கொடுமையையும் அவமானத்தையும் நினைத்துக்கொள்ளுங்கள் என்று சொல்கிறார். ஏன் எனில், அப்படி நினைக்கும்போது நமக்கு வரும் சிறு துன்பங்கள் சிறியவையாகத் தெரியும். எபிரெய விசுவாசிகள் துன்பத்தால் சோர்ந்து விசுவாசத்தை விட்டுவிட ஆசைப்பட்டார்கள். அவர்களுக்கு இயேசுவின் சகிப்புத்தன்மையை நினைவூட்டி மனத்தில் புத்துணர்வு தருகிறார்.
