ஏசாயா 14:23முள்ளம்பன்றியின் இடம்
அதை முள்ளம்பன்றிகளுக்குச் சுதந்தரமும், தண்ணீர் நிற்கும் பள்ளங்களுமாக்கி, அதைச் சங்காரம் என்னும் துடைப்பத்தினால் பெருக்கிவிடுவேன் என்று சேனைகளின் கர்த்தர் சொல்லுகிறார்.
Isaiah 14:23
முள்ளம்பன்றியின் இடம்
பெரிய பாபிலோன் நகரம் இப்போது முள்ளம்பன்றிகளுக்கு சொந்தமான வெட்டவெளியாகவும், தண்ணீர் நிற்கும் பள்ளங்களாகவும் மாறும் என்று சொல்லப்படுகிறது. மகிமை பொருந்திய நகரம் பாழிடமாகி, சங்காரம் என்ற துடைப்பத்தினால் அது பெருக்கிவிடப்படும். இது எத்தனை பெரிய சிறுமை. உலக மகிமையின் நிலைத்தன்மையை நம்புவதற்கு பதிலாக, என்றும் நிலைத்திருக்கும் தேவனையே நம்ப வேண்டும் என்பதே இதன் படிப்பினை.
