ஏசாயா 37:1இரட்டு உடுத்தி ஆலயத்தில்
ராஜாவாகிய எசேக்கியா அதைக்கேட்டபோது தன் வஸ்திரங்களைக் கிழித்து, இரட்டு உடுத்துக்கொண்டு, கர்த்தருடைய ஆலயத்தில் பிரவேசித்து,
Isaiah 37:1
இரட்டு உடுத்தி ஆலயத்தில்
ரப்சாக்கேயின் மிரட்டல் வார்த்தைகளைக் கேட்டதும் எசேக்கியா ராஜா செய்தது என்ன தெரியுமா? சொந்த பலத்தில் பதில் சொல்ல முயலவில்லை. வஸ்திரத்தைக் கிழித்து, துக்கவுடை உடுத்தி, நேராக கர்த்தருடைய ஆலயத்திற்குப் போனார். ராஜா என்ற பெருமையை மறந்து, தேவனுக்கு முன் தன் பயத்தையும் பலவீனத்தையும் காட்டிய தாழ்மையான நிலை இது. நமக்கும் பயம் வரும்போது முதலில் செய்ய வேண்டியது இதுவே.
