ஏசாயா 40:7கர்த்தருடைய ஆவி ஊதும்
கர்த்தரின் ஆவி அதின்மேல் ஊதும்போது, புல் உலர்ந்து, பூ உதிரும்; ஜனமே புல்.
Isaiah 40:7
கர்த்தருடைய ஆவி ஊதும்
வெயில் காலத்தில் புல் உலர்ந்து பூ உதிர்வதைப் பார்த்திருப்போம். அதே போலத்தான் கர்த்தருடைய ஆவி ஊதும்போது மனுஷ வல்லமையும், மனுஷ கர்வமும் மறைந்துபோகும். 'ஜனமே புல்' என்ற இந்த வார்த்தை பாபிலோனின் வல்லமையையும், அதன் அகந்தையையும் குறிக்கிறது என்று பலர் கருதுகிறார்கள். எவ்வளவு பெரிய சாம்ராஜ்யமும் தேவனுக்கு முன்பாக இந்த சிறு புல் போலத்தான்.
