ஏசாயா 42:16இருளை வெளிச்சமாக்குவேன்
குருடரை அவர்கள் அறியாத வழியிலே நடத்தி, அவர்களுக்குத் தெரியாத பாதைகளில் அவர்களை அழைத்துக்கொண்டு வந்து, அவர்களுக்கு முன்பாக இருளை வெளிச்சமும், கோணலைச் செவ்வையுமாக்குவேன்; இந்தக் காரியங்களை நான் அவர்களுக்குச் செய்து, அவர்களைக் கைவிடாதிருப்பேன்.
Isaiah 42:16
இருளை வெளிச்சமாக்குவேன்
குருடரை அறியாத வழியில் நடத்தி, இருளை வெளிச்சமும் கோணலை செவ்வையுமாக்கி, அவர்களைக் கைவிடாதிருப்பேன் என்று தேவன் வாக்குக் கொடுக்கிறார். வழி தெரியாதவர்களை தேவனே கை பிடித்து நடத்துவார் என்பது எத்தனை ஆறுதலான வார்த்தை. கைவிடாதிருப்பேன் என்ற வார்த்தையே இந்த வசனத்தின் இதயம்.
