ஏசாயா 44:15அடுப்புமரமும் தெய்வமும்
மனுஷனுக்கு அவைகள் அடுப்புக்காகும்போது, அவன் அவைகளில் எடுத்துக் குளிர்காய்கிறான்; நெருப்பைமூட்டி அப்பமும் சுடுகிறான்; அதினால் ஒரு தெய்வத்தையும் உண்டுபண்ணி, அதைப் பணிந்துகொள்ளுகிறான்; ஒரு விக்கிரகத்தையும் அதினால் செய்து, அதை வணங்குகிறான்.
Isaiah 44:15
அடுப்புமரமும் தெய்வமும்
அதே மரத்தினால் அடுப்பு மூட்டி குளிர்காய்கிறான், அப்பம் சுடுகிறான், அதே மரத்தினால் ஒரு தெய்வத்தையும் உண்டுபண்ணி பணிந்துகொள்கிறான். ஒரு பகுதியை சாதாரண எரிபொருளாகவும் மறுபகுதியை பரிசுத்த தெய்வமாகவும் பாவிப்பது எவ்வளவு விந்தை. இந்த வேறுபாடு மனிதனின் மனசே உருவாக்கிக்கொண்டது, மரத்திற்கு அதில் எந்த வித்தியாசமும் இல்லை. கர்த்தர் இந்த அபத்தத்தை மிக நுட்பமாய் சுட்டிக்காட்டுகிறார்.
