ஏசாயா 44:21நான் உன்னை உருவாக்கினேன்
யாக்கோபே, இஸ்ரவேலே, இவைகளை நினை; நீ என் தாசன்; நான் உன்னை உருவாக்கினேன்; நீ என் தாசன்; இஸ்ரவேலே, நீ என்னால் மறக்கப்படுவதில்லை.
Isaiah 44:21
நான் உன்னை உருவாக்கினேன்
விக்கிரகங்களைப் பற்றிய கடினமான வார்த்தைகளுக்குப் பின்பு, கர்த்தர் மறுபடி அன்பாய் யாக்கோபை அழைக்கிறார். 'இவைகளை நினை' என்று சொல்வதன் மூலம் இந்த முழு உண்மையையும் மனசில் வைத்துக்கொள்ளும்படி கேட்கிறார். 'நீ என் தாசன்' என்பதை இரண்டு தடவை சொல்வதில் எவ்வளவு அன்பான உறுதிப்பாடு. மறக்கப்படுவதே இல்லை என்ற உத்தரவாதம் அடிமைத்தன பயத்தில் இருந்த ஜனத்திற்கு எத்தனை பெரிய ஆறுதல்.
