ஏசாயா 48:14கல்தேயர் மேல் புயம்
நீங்களெல்லாரும் கூடிவந்து கேளுங்கள்; கர்த்தருக்குப் பிரியமானவன் அவருக்குச் சித்தமானதைப் பாபிலோனில் செய்வான்; அவன் புயம் கல்தேயரின்மேல் இருக்கும் என்பதை இவர்களில் அறிவித்தவன் யார்?
Isaiah 48:14
கல்தேயர் மேல் புயம்
கூடிவந்து கேளுங்கள் என்று அழைக்கிறார் கர்த்தர் - யார் இதைச் சொல்லி முன்னறிவித்தார்கள் என்று. கர்த்துக்குப் பிரியமான ஒருவன் பாபிலோன் மேல் அவருடைய சித்தத்தை நிறைவேற்றுவான், அவன் புயம் கல்தேயரின் மேல் இருக்கும் என்பது கோரேசு அரசனைப் பற்றிய முன்னறிவிப்பாகக் கருதப்படுகிறது. இது வெறும் அரசியல் நிகழ்வு அல்ல, கர்த்தருடைய திட்டத்தின் நிறைவேற்றம். எதிரிகளையும் கர்த்தர் தம் நோக்கத்திற்கு பயன்படுத்த வல்லவர்.
