ஏசாயா 52:5தூஷிக்கப்படும் நாமம்
இப்பொழுது எனக்கு இங்கே என்ன இருக்கிறது, என் ஜனங்கள் விருதாவாய்க் கொண்டுபோகப்பட்டார்கள்; அவர்களை ஆளுகிறவர்கள் அவர்களை அலறப்பண்ணுகிறார்கள்; நித்தமும் இடைவிடாமல் என் நாமம் தூஷிக்கப்படுகிறது என்று கர்த்தர் சொல்லுகிறார்.
Isaiah 52:5
தூஷிக்கப்படும் நாமம்
தம் ஜனங்கள் அடிமைத்தனத்தில் இருப்பதைப் பார்த்து கர்த்தருடைய இதயம் வேதனையடைகிறது. அவர்களை ஆளுகிறவர்கள் அவர்களை அலறப்பண்ணுகிறார்கள், அதோடு அயல் தேசத்தார் கர்த்தருடைய நாமத்தையே கேலி செய்கிறார்கள். தம் ஜனத்தின் அவமானம் தம் நாமத்தின் அவமானமாகவே கர்த்தர் கருதுகிறார். இது நமக்குக் காட்டுவது என்னன்றால், நம் கஷ்டத்தில் தேவனும் பங்கு கொள்கிறார் என்பதே.
