எரேமியா 17:1இருதயத்தில் பதிந்த பாவம்
யூதாவின் பாவம் இரும்பெழுத்தாணியிலும், வைரத்தின் நுனியினாலும் எழுதப்பட்டு, அவர்களுடைய இருதயத்தின் பலகையிலும் உங்கள் பலிபீடங்களுடைய கொம்புகளிலும் பதிந்திருக்கிறது.
Jeremiah 17:1
இருதயத்தில் பதிந்த பாவம்
கல்லிலோ மணலிலோ அல்ல, யூதாவின் பாவம் இரும்பெழுத்தாணியால், வைரத்தின் நுனியால் ஆழமாய் பொறிக்கப்பட்டிருந்தது. அது எத்தனை நாள் ஆனாலும் அழியாத பொறிப்பு. அவர்களுடைய இருதயத்திலும், பலிபீடங்களின் கொம்புகளிலும் இது ஆழமாய் வேரூன்றியிருந்தது என்று கர்த்தர் காண்பிக்கிறார். பழக்கமான பாவம் இப்படிதான் - மேலோட்டமாய் அல்ல, ஆழத்தில் பதிந்துவிடும்.
