எரேமியா 20:11பராக்கிரமசாலியான கர்த்தர்
கர்த்தரோ பயங்கரமான பராக்கிரமசாலியாய் என்னோடு இருக்கிறார், ஆகையால் என்னைத் துன்பப்படுத்துகிறவர்கள் மேற்கொள்ளாமல் இடறுவார்கள்; தங்கள் காரியம் வாய்க்காதபடியால் மிகவும் வெட்கப்படுவார்கள்; மறக்கப்படாத நித்திய இலச்சை அவர்களுக்கு உண்டாகும்.
Jeremiah 20:11
பராக்கிரமசாலியான கர்த்தர்
இத்தனை துன்பத்திற்கு நடுவிலும் எரேமியா நம்பிக்கையை மறக்கவில்லை. கர்த்தர் பராக்கிரமசாலியாக அவரோடு இருக்கிறார் என்பதால், அவரைத் துன்பப்படுத்துகிறவர்கள் தோற்று, நித்திய இலச்சையை அடைவார்கள் என்று அவர் உறுதியாக நம்பினார். புலம்பலுக்கிடையிலும் இந்த நம்பிக்கை மீண்டும் மீண்டும் மேலெழுவது கண்கூடு. இருள் சூழும் நேரத்திலும் தேவனை நம்பியிருப்பது நமக்கும் வழிகாட்டுகிறது.
