எரேமியா 29:6பெருகிக் கொள்ளுங்கள்
நீங்கள் பெண்களை விவாகம்பண்ணி, குமாரரையும் குமாரத்திகளையும் பெற்று, உங்கள் குமாரருக்குப் பெண்களைக்கொண்டு, உங்கள் குமாரத்திகளைப் புருஷருக்குக் கொடுங்கள்; இவர்களும் குமாரரையும் குமாரத்திகளையும் பெறட்டும்; நீங்கள் அங்கே குறுகாமல் பெருகி,
Jeremiah 29:6
பெருகிக் கொள்ளுங்கள்
பெண்களை விவாகம் செய்து, பிள்ளைகளை பெற்று, தங்கள் பிள்ளைகளுக்கும் திருமணம் செய்து பெருகிக் கொள்ளுங்கள் என்று கர்த்தர் சொல்கிறார். எழுபது வருடம் நீடிக்கும் சிறையிருப்பை தேவன் ஏற்கனவே அறிந்திருந்ததால் இப்படி சொல்கிறார். அது ஒரு தலைமுறை மட்டும் அல்ல, தலைமுறை தலைமுறையாக நீடிக்கும் என்பதற்கான தயாரிப்பு இது. கடினமான காலத்திலும் வாழ்க்கையை நிறுத்திவிடாமல் தொடர வேண்டும் என்பதை நாம் இதிலிருந்து கற்றுக்கொள்ளலாம்.
