எரேமியா 35:15ஏராளமான தீர்க்கதரிசிகள்
நீங்கள் அந்நிய தேவர்களைச் சேவிக்கும்படி அவர்களை பின்பற்றாமல், அவனவன் தன் பொல்லாத வழியை விட்டுத் திரும்பி, உங்கள் நடக்கையைச் சீர்திருத்துங்கள், அப்பொழுது உங்களுக்கும் உங்கள் பிதாக்களுக்கும் நான் கொடுத்த தேசத்திலே குடியிருப்பீர்கள் என்று சொல்லி, தீர்க்கதரிசிகளாகிய என் ஊழியக்காரரையெல்லாம் நான் உங்களிடத்துக்கு ஏற்கனவே அனுப்பிக்கொண்டிருந்தும், நீங்கள் உங்கள் செவியைச் சாயாமலும் எனக்குக் கீழ்ப்படியாமலும்போனீர்கள்.
Jeremiah 35:15
ஏராளமான தீர்க்கதரிசிகள்
கர்த்தர் தன் ஊழியக்காரரான தீர்க்கதரிசிகளை ஏராளமாக அனுப்பி, தன் பொல்லாத வழியை விட்டுத் திரும்பும்படி எச்சரித்திருந்தார். இந்த அழைப்பு ஒருமுறை மட்டும் அல்ல, தொடர்ந்து மீண்டும் மீண்டும் வந்தது. கர்த்தர் தன் ஜனத்தை தண்டிக்க ஆவலாக இல்லை, மீண்டும் மீண்டும் அவகாசம் தந்தார். ஆனாலும் அவர்கள் தங்கள் செவியைச் சாயாமலும் கீழ்ப்படியாமலும் போனார்கள் என்பது எத்தனை வேதனையான உண்மை.
