எரேமியா 36:25விண்ணப்பித்த மூவர்
எல்நாத்தானும், தெலாயாவும், கெமரியாவுமோ: அந்தச் சுருளைச் சுட்டெரிக்க வேண்டாம் என்று ராஜாவினிடத்தில் விண்ணப்பம் பண்ணினார்கள்; ஆனாலும் அவர்களுக்கு அவன் செவிகொடாமல்,
Jeremiah 36:25
விண்ணப்பித்த மூவர்
எல்நாத்தான், தெலாயா, கெமரியா என்ற மூன்று பிரபுக்கள் அந்த சுருளை எரிக்க வேண்டாம் என்று ராஜாவை வேண்டுகிறார்கள். அவர்கள் தங்கள் தரப்பில் சரியானதைச் செய்ய முயற்சி செய்தார்கள், ஆனால் ராஜா அவர்களுக்கு செவிசாய்க்கவில்லை. எல்லோரும் தவறு செய்யும் நேரத்திலும், சரியானதைச் சொல்ல முயற்சி செய்யும் சிலர் எப்போதும் இருக்கிறார்கள் என்பது நமக்கு நம்பிக்கை தருகிறது.
